உன்னை கண்டவுடன்




ஏனோ சில நாட்களாய்
பொய்ப் பேசுகிறது
என் விழிகள்..!
உன்னுடன் வர இசைந்து
அலைப்பாய்ந்து நிற்கிறது
என் மனம்..
ஆனால் அசைவற்று

நிற்கிறேன் நான்!
உன்னில்தொலைத்த என்னை
தேட நினைக்கிறது
என் உள்ளம்...
ஆனால் வெட்கத்தால்
சிவந்து நிற்கிறேன்
நான்.!

ஆயிரமாயிரம் 
என் ஏக்கத்தை
எடுத்துரைக்கத் துடிக்கிறது
என் உதடுகள்
ஆனால் 
மௌனமெனும் பூட்டால்
வார்த்தைகளைப் பூட்டி
விடுகிறது என் இதயம்
காதலால் கண் கலங்கி
நிற்கிறேன் நான்
கலங்கிய என் கண்களைக்
கொண்டாவது கண்டுக்
கொள்ள மாட்டாயா
என் காதலை.. என்று.!




Comments